google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கடன் மேல் கடன்-போதுமாடா சாமி

Monday, April 16, 2012

கடன் மேல் கடன்-போதுமாடா சாமி


சிவனே என்றுயிருந்தேன்
அவர்களே வந்தார்கள்
கடன் அட்டை தந்தார்கள்
காசோலை வாங்கிக்கொண்டு
கடனும் கொடுத்தார்கள்.

எல்லாம் சரியாகத்தான் போனது
எங்கேயோ ஒரு தவறு
வட்டி குட்டிப்போட்டு
அசலைத்தாண்டிவிட்டது.
விட்டால் போதுமென்று விலகினால்  
போனில் தொல்லை நேரில் தொல்லை
தடிதடியாக குண்டர்கள்
அடிதடிவரை வந்துவிட்டது

நீதிமன்றத்தில் முறையீடு
வக்கீல்கள்-குமாஸ்தாக்கள்-நீதிபதி
கைகட்டி நின்றேன் குற்றவாளியாக  
அவர்களே பேசிக்கொண்டார்கள்
வாங்கிய கடனில் பாதியை
அவர்களே புடுங்கிக்கொண்டார்கள்
வாய்த்தா..... வாய்த்தா.... வாய்த்தா
எழுவருடம் கழித்து தீர்ப்பு.

மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில்
மூன்று வருடம் அலைக்கழிப்பு
அப்புறம் விரைவு நீதிமன்றம்
நீதிபதி மாமியாருக்கு நெஞ்சுவலியாம்
இருக்கும் பாதிக்கடனில் மீதியை
அன்பளிப்பாய்(கையூட்டு) கேட்டார்கள்.
எதிரியிடம் சரணடைந்தேன்.
ஏறிய மனஅழுத்தம் இறங்கிவிட்டது

ஆனால்,
420 நானா? அவர்களா?
அதுமட்டும் புரியவில்லை இதுவரை.  
***********************************
இந்த  சங்கடம் 
இப்போது இல்லை          
இல்லாமல் போனது 
அவர்கள் தொல்லை 
எலிகள்                              
வடையை தின்றுவிட்டு 
பொறியையும் 
உடைத்துவிட்டன
 *********************************
காணொளி-Sothanai Mel Sothanai

                                            Thanks-YouTube-Uploaded by ssanjee 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1