அவளைக் காணவில்லை
அவள் என் உறவினர் மகள்
திருமணவயதைத் தாண்டியவள்
மூத்தமகளுக்கு வாய்த்தவனோ குடிகாரன்
இவளுக்காவது நல்ல மாப்பிள்ளை
வர வேண்டுமென்று இருந்தார் தந்தை.
அவளைக் காணவில்லை.
கலங்கிப்போனார் தந்தை
துடித்துப்போனாள் தாய்
யாரோ கடத்திவிட்டார்கள் என்று
காவல் நிலையத்தில் முறையிட்டோம்
தேடினார்கள் தேடினோம்
எங்குதேடியும் கிடைக்கவில்லை
இரண்டு நாட்களாகிவிட்டது
தூக்கில் தொங்கினால் தாய்
பதினாறாம் நாள்....
தூங்கிவிட்டார் தந்தையும் நிரந்தரமாக.
எல்லோரும் வந்தார்கள் காரியத்துக்கு
அவளும் வந்தாள் ஒருவனுடன்.
ஓடிப்போகவில்லையாம்
காதலனோடு
இணைந்துவிட்டாளாம்.
இணைந்துவிட்டாளாம்.
இப்படியும் ஒரு காதலா?
இதுதான் காதல் என்றால்
வாழ்க காதல்!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |