google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தாய்க்கு ஒரு தாலாட்டு

Sunday, April 01, 2012

தாய்க்கு ஒரு தாலாட்டு



ஆராரிரோ.... ஆராரிரோ....
அம்மா
இது
நீ தூங்கிய பிறகு
நான் பாடும் தாலாட்டு!
இங்கு
உன் கல்லறைதான்
தூளியானது.
என் கவிதைதான்
பாடல் ஆனது.

ஆராரிரோ.... ஆராரிரோ....
எதனைப் பாடல்கள்
பாடி என்னை
தூங்கவைத்தாய்?.
ஆராரிரோ.... ஆராரிரோ....
அன்று நீ பாடிய
அதே வரிகள்தான்
தாயே!
கொஞ்சம் விழித்திடு!
நான் சரியாக பாடுகிறேனா?
என்று சொல்லிவிட்டு
மீண்டும் தூங்கிவிடு.
நன்றி மறவாதே
என்றது நீதானே!.  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1