1
ஆணிவேர்
இல்லையேல்
அது மரமல்ல!
2
வைரத்தை தேடி
அலையாதே!
அதன் மீதுதான்
நீ நிற்கிறாய்!
3
மலைத்து நிற்காதே!
மிக அருகில் போனால்
மலைகூட மண்மேடுதான்.
4
சுட்டெரிக்கும் சூரியனை
உன் சுட்டுவிரலால்
சுட்டுவிடு!
5
போதை விடு
பாதை தேடு
பாதை இல்லையேல்
பாதை போடு!
6
ஆசை-
அளவோடு வீசினால்
அது தென்றல்.
அதிகமாக வீசினால்
அது புயல்
7
உன்
கல்லறை மீது
ஏதேனும் எழுதிவைக்க
நல்லதை ஏதேனும்
செய்துவிட்டு போ!
8
அன்று ஷேக்ஸ்பியர் எழுதிய
நாடகங்களைப் படியுங்கள்
இன்று பேசுபவர்களின்
வார்த்தைஜாலங்கள் புரியும்
9
வாழ்ந்தவர்களின்
வரலாறைப் படியுங்கள்
அப்போதுதான்
நிகழ்காலத்தின்
நிஜங்கள் தெரியும்
10
கர்வம்
கீரீடமானால்
தலை இருக்காது
தலைவலிதான் இருக்கும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |