google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கிறுக்கல்கள்-2

Saturday, May 12, 2012

கிறுக்கல்கள்-2


1
பொய்-
நம் முகவரியை
மாற்றிவிடும்.
எதுவும்
நம்மிடம் வந்துசேராது.       
2
அமைதி
அதிக சக்தியானது
நமக்கு நாமே
பாதுகாப்பானது  
3
அடுத்தவரிடம்
நம் கவலைகளை
சொல்வது
நம் சவக்குழியை
நாமே தோண்டுவது

4
இல்லாததை
இருப்பதாக நினைத்து
இருக்கின்றதையும்  
இழந்துவிடதீர்கள்
5
நம் துன்பத்திற்கும்
நம் இன்பத்திற்கும்
நாமே இறைவன்
இடையில் ஏன் தூதுவன்
6
நம் பாதங்களுக்கு
கிழிருக்கும் 
இந்த பூமிக்குத்தான்
எத்தனை வேகம்?
 7
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்போருக்கு வாழ்வில்
என்றும்மில்லை ஒன்றுமில்லை!
8
தோல்வி என்பது
துவண்டுவிட அல்ல     
வெற்றி போரட்டத்தின்
வேர்வையை துடைக்க!
9
மரணத்தை நினைத்து
மலர்கள் அழுவதில்லை
வீழ்ந்துபோனாலும்
வீரிய விதைக்கு
வித்திட்டுபோகின்றன!
10
வெற்றி என்பது 
அதிர்ஷ்ட்டத்தின் அன்பளிப்பல்ல
எதையும் இழக்காமல் கிடைக்காது
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1