1
வல்லமையை கல்லாமை…
கற்றபடி நில்லாமையே
அறியாமை!
2
கிளராத நெருப்பு
நீர்த்துவிடும்!
தீட்டாத கோடாரி
மழுங்கிவிடும்!
3
சுறு சுறுப்பாய் இருந்தால்
விறு விறுப்பாய் இருக்கும்
சோம்பி இருந்தால்
சூம்பிப்போகும் வாழ்க்கை!
4
எதையாவது செய்யவேண்டும்
நினைப்பவன் தோல்வியாளன்
செய்பவன் வெற்றியாளன்
5
உறுதிமொழி
என்பதெல்லாம்
இறுதிமொழிதான்
6
வெற்றியாளன் வார்த்தைகளில்
ஆவேசம் இருக்கும்
தோல்வியாளன் வார்த்தைகளில்
துவேசம் இருக்கும்
7
வெற்றி ஒரு பயணம்
நீண்ட பயணம்.
முடிவே இல்லாதது.
8
நம் பாதையெங்கும்
குறிக்கோள்கள் பூத்துக்கிடக்கும்
லட்சியம்கள் சிந்திக்கிடக்கும்
அலட்சியம் செய்யாமல்
அள்ளிக்கொண்டால்
வெற்றிமாலை
கோர்த்துவிடலாம்!
9
தேக்கம்மில்லாத
நீரோட்டத்தில்தான்
தெளிவு தெறியும்
10
பதக்கத்தைப் பார்ப்பான் வெற்றியாளன்
விலையைப் பார்ப்பான் தோல்வியாளன்
வெற்றிப்பரிசுக்கு விலையே கிடையாது
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |