1
தொடுகோட்டை
தொட்டுவிட்டாலே
வெற்றி தீர்மானிக்கப்படுகிறது
2
கூட்டுப்புழுதான்
கூட்டைக்கிழித்து
வெளியேறவேண்டும்
3
பிரச்சனைகளுடன்
போராடத் தெறிந்தவன்,
சுனாமி வந்தாலும்
சுதாரித்துக்கொள்வான்.
4
ஏணிகள் ஏதுமில்லை
ஏற்றிவிடும் ஏணி என்று
சறுக்குமரத்தில் தொங்காதே!
5
கடலில் தத்தளிக்கும்போது
கப்பல் வரும் என்று
காத்திருக்காதே!
6
கழுதை மீதமர்ந்து
குதிரை பந்தயம்
போகமுடியுமா?
7
கல்குவாரியில்
கல் உடைப்பவனால்
சின்ன சிலையைகூட
செதுக்க முடியாது
8
நாம் என்ன பேசுகிறோமோ
அதுதான் நமக்கு கேட்க்கும்
நாம் என்ன செய்கிறோமோ
அதுதான் நமக்கு நடக்கும்
9
எல்லோரும்
வணக்கத்துக்குரியவர்களே
என்று நினைத்தால்
நாம் வணங்கப்படுவோம்
10
தர்மம் செய்!
தலை காக்கும் என்று
தர்மம் செய்யாதே!
அது
அவநம்பிக்கையின்
அடையாளம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |