நேற்று இருப்பவர்
இன்று இல்லை
இன்று இருப்பவர்
நாளை இல்லை
இது வாழ்வின் மாயை
எல்லோருக்கும்
பகுத்தறிவு வந்துவிட்டால்
கடவுள்கள்கூட
கானாமல்போவார்கள்
இது அறிவு மாயை
உழைப்பவன் எல்லாம்
ஓன்று சேர்ந்துவிட்டால்
முதலாளிகள் ராச்சியம்
முடிந்துபோய்விடும்
இது பொருளாதார மாயை
இருப்பன் எல்லாம்
பதுக்கிகொண்டால்
பதுங்கிகொண்டால்
இல்லாமை தாண்டவமாடும்
இது வஞ்சகமான மாயை
காமத்தோடு
காதல் செய்தால்
காதலும் அழிந்துபோகும்
கற்பும் கேள்விக்குறியாகும்
இது வாலிபத்தின் மாயை
சுட்டெரிக்கும் சூரியன்கூட
மாலையானால்
மறைந்துபோகுது
நிலவும் தேய்ந்துபோகுது
இது இயற்கையின் மாயை
மலையாக இருந்தது
மண் மேடானது
மரங்களெல்லாம்
புல்தரைகளானது
இது செயற்கை மாயை
இப்படி மாயை நிறைய...
நிலையானது எதுவென்று
நித்தம் நித்தம் தேடியே
பித்தனாக அலைகிறேன்
எதுவும் நிலையில்லை
என்ற முடிவும் வரவில்லை
எதுவும் தெரியவில்லை
இதுவே என் மாயை
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |