google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உயிருள்ள பேய்கள்-6

Sunday, May 06, 2012

உயிருள்ள பேய்கள்-6





இந்த பேய்
வித்தியாசமான பேய்.

பல்லைக் காட்டிக்கொண்டு
பயங்காட்டுவதும்
அடித்து விரட்டினாளோ
அடங்கிப்போவதும்
பீனிக்ஸ் பறவைபோல்
மீண்டும் பிறந்து
பல்லைக்காட்டுவதும்
படு மோசமான லஞ்சப்பேய்....  

இந்த பேய்க்கு
உயிர் இருக்கிறதா? இல்லையா?
பட்டிமன்றம் வைத்தாலும்
பதில் சொல்ல முடியாமல்
பாதியிலேயே ஓடுவார் நடுவர்

இந்த பேய்
இல்லாத இடமே இல்லை
கடவுள் மாதிரி.
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்

இந்த விஷ செடியின்
ஆணிவேர்
பாதாளம் வரை
பாய்ந்துள்ளது   
அண்ணா ஹசாரே போல்
ஆயிரம் பேர் வந்தாலும்
அழிக்க முடியுமா?
புதிராகவே இருக்கு.  

அன்றும்
மக்களுக்காக
வெள்ளையனை விரட்ட
காந்திஜிதான் வந்தார்
அகிம்சா வாதியாக.

இன்றும்
மக்களுக்கு
காரியம் சாதிக்க
காந்திஜிதான் வருகிறார்
கரன்சி நோட்டாக

இருக்கும்போதும்
இறந்தபோதும்
மக்களுக்காகவே
வாழ்வதால்தான்
மகாத்மா ஆனாரோ! 

இதற்குமேல்
இந்த லஞ்ச்ப்பேய்களை
எழுதினால்
எதாவது ஒரு பேய்
என்னிடமும் வந்து
சாதகமாக எழுதச் சொல்லி
சம்திங் நீட்டினாலும் நீட்டும்
..................................(தொடரும்)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1