ராட்டினம்போல்
மேலும் கீழும்
போய்கொண்டிருக்கிறது
வாழ்க்கையும் எழுத்தும்
வசை பாடுவதில்
என்ன இருக்கு?
வாழ்வியத்தையும்
வாழ்வாதாரத்தை
ஒரு வரியில் சொன்ன
ஒளவையாரைவிட...
இரண்டு வரிகளில்
இயம்பிய வள்ளுவரைவிட...
இவ்வையகத்தில்
யார்தான் பெரிய கவி?
காளான் போல்
முளைப்பதும்
கானாமல் போவதும்தான்
தமிழுக்கு செய்யும் தொண்டா?
கணக்கற்ற நூல்களை
படிக்கவேன்டாமா?
காலத்தை வெல்லும் கவிதை
படைக்கவேன்டாமா?
சொல்லில்
சுத்தமில்லை எனில்
செல்லரிக்க செய்யும்
காலக்கரையான்கள்
************************
காணொளி-பாரதிதாசன்..
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |