அன்று தலை சுற்றியது
அருகிலுள்ள மருத்துவரிடம்
அவசரமாய் போனேன்
ஆயிரம் கேள்விகள் கேட்டு
அதிரடியாய் பரிசோதனை செய்து
பத்தாயிரத்தை பறித்துக்கொண்டு...
பத்து மாத்திரைகள் தந்தார்
தூங்கப்போவதர்க்கு முன்
ஒரு மாத்திரை போதும்
பத்தும்போட்டால்
போய்விடுவாய் பரலோகம்....
எழுதித்தந்தார் தூக்கமாத்திரை...
தூக்கத்தை தொலைத்தால்
பணமும் தொலைந்துவிடுமோ?
இப்போதெல்லாம் நான்
மாத்திரை இல்லாமலே
கும்பக்கர்ணனாக தூங்குகிறேன்
பத்திரமாயிருக்கு பணமும்...
"விழித்திரு! எழுந்திரு!"
விழுவதில்லை காதில்...
பட்டுக்கோட்டையார் பாடலும்
பாடுவதில்லை... நான்.
Thanks-YouTube-Uploaded by kethirapalu on Jan 28, 2010
**********************************
காணொளி-தூங்காதே தம்பி.....
Thanks-YouTube-Uploaded by kethirapalu on Jan 28, 2010
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |