ஒரு கிலோ பச்சரிசி
இனிக்கட்டும் என்று
ஒரு கிலோ வெல்லம்
அரைலிட்டர் நெய்
ஏலம் முந்திரி என்று
எல்லாம்போட்டு
பொங்கல் வைத்து
பானையோடு கொடுத்தேன்
பூஜை செய்ய....
பூஜை முடிந்ததும்
எங்கே பிரசாதம்?
என்று கேட்டால்...
எல்லாவற்றையும்
தின்றுவிட்டார் கடவுள்
என்று சொன்னார் பூசாரி
அதுவும் சரிதான்
அன்று பால் குடித்த
கடவுளுக்கு
படையல் திண்ண தெரியாதா?
படையல் திண்ண தெரியாதா?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |