உன் அருகில் வந்தேன்
நீ விடும் சுவாசக்காற்றை
என் இதயம் வரை
இழுத்துக்கொண்டேன்
உன் அருகில் வந்தேன்
உன் முகம் உதிர்த்த
புன்னகைப் பூக்களை
என் இதயத்தில் வைத்து
பூஜை செய்தேன்
உன் அருகில் வந்தேன்
உன் கருவிழிகள் வீசிய
காந்தவிசையில்
என் காயங்கள் எல்லாம்
கானமல்போனதே!
உன் அருகில் வந்தேன்
உன் இதழ்கள் சிந்திய
இன்பத்தேனில்
இளமைப்பசி
இல்லாமல்போனதே!
உன் அருகில் வந்தேன்
உன் கரிய கூந்தலின்
சிலிர்த்திடும் வாசத்தால்
சிந்தனை மறந்தேன்.
உன் அருகில் வந்தேன்
என் காதலைச் சொன்னேன்
நீயும் உன் செவ்வாய் திறந்து
காதலை சொல்வாய் என்று.
தவமிருந்தேன் தவமிருந்தேன்
காதல் தவமிருந்தேன்
வந்து சொல்கிறேன்
என்று போனவள்தான் நீ
இன்றுவரை வரவில்லை
என்ன காரணம் தெரியவில்லை
விடியல்கள்...வருகின்றன...போகின்றன
என் வாழ்க்கை மட்டும்
இருண்டே கிடக்கிறது
என் வாழ்வில் இல்லை வெளிச்சம்
என் தலை நரைத்ததுதான் மிச்சம்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |