காதல் செய்யும்
வார்த்தைகளில்
வந்துபோகும்
வர்ணங்கள்
எண்ணிலடங்காது
ஏய்ப்பவரின்
இதயத்தின் உள்ளே
இருக்கும் எண்ணமோ
கருப்பு நிறம்....
பேசும்போது
பசப்பு நிறைந்த
பச்சை நிறம்
தோல்வியுற்றோர்
கண்கள் பேசுமே
சிகப்பு நிறம்
உண்மைக்காதலோ
வெள்ளை நிறம்
வெற்றிபெற்றால்
வந்துசேரும்........
வானவில்லின்
வர்ணங்கள் ஏழும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |