பேசினாள் பேசினாள்
பேசிக்கொண்டே நடந்தாள்...
நடந்துகொண்டே பேசினாள்....
கைபேசியில் யாருடனோ....
பார்ப்பவர்களுக்கு
தனக்குத்தானே
பேசி சிரிக்கும்
பைத்தியம் அவள்
யாருடன் பேசுகிறாள்?
அய்யோ அறிவிலி!
அகப்பட்டுக்கொண்டாளே
சாலையை கடக்கும்போது
வாகனத்துக்கடியில்....
வீழ்ந்துவிட்டாலே
எமனது மடியில்...
விழுந்துகிடந்ததே
கைபேசி தனிமையில்...
கைபேசியில் கேட்டது
தொலைக்காட்சியின்
ஆண் காம்பியரின் குரல்....
“அறிவிலி!
நீங்கள் கேட்ட பாடல்
உங்கள் காதலருக்காக
ஒலிபரப்பாகிறது.....”
‘கண்பேசும் வார்த்தைகள்
புரிவதில்லை.......
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |