google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மெஞ்ஞானத்தை வென்றது விஞ்ஞானம்

Wednesday, May 30, 2012

மெஞ்ஞானத்தை வென்றது விஞ்ஞானம்



(கடவுள்=கட+உள்(உள்ளே)
 கடந்துபார்த்தால்  கடவுளை உணரலாம்  
இதைதான் : தன்னை தான் உணர்தல் என்று
சித்தர்கள் குறிப்பிடுவார்கள் 
 . கடவுளை காண முடியாது .காட்டமுடியாது  
உணரமட்டுமே முடியும்
 பக்தியும் பிரார்த்தனையும்  
உலகவாழ்கைக்காக அல்ல 
தன்னை உணர்வதர்க்காகதான்
 தன்னை உணர்ந்தவன் ஞானி ஆகிறான்)....
.திரு.சம்பந்தன் வைத்யநாதன் அவர்கள்)  

இதன் பொருள் ஒருவரியில்....
சாக்ரெடிஸ் சொன்ன....
‘உன்னையே அறிவாய்
இப்படி நடந்தால்
மனிதர்களே இப்புவியில்
இருக்க மாட்டார்கள்
அனைவரும் கடவுளாகத்தான்
அலைந்து கொண்டிருப்பார்கள் 
(அவ்வப்போது அவதரிக்கும்
கடவுள்களாலேயே கால நீரோட்டம்
கலங்கிப்போகிறது சாக்கடையாக..
எல்லோரும் கடவுள்களானால்
என்னவாகும் இந்த நாடு?)

நாலு தலைமுறை
மனிதர்கள் வாழும்
அந்த ஊரின் குறுக்கே
ஓடியது ஒரு ஆறு....
அதியாவாச பொருட்களுக்கு
அதை கடந்து போனால்தால்
வாழமுடியும் உயிரோடு....
ஊர் கூடி ஆலோசித்தது

முதல் தலைமுறையின்  
மூத்த பெரியோகளோ
கடவுடளை வணங்கி
அனைவரும் கைகோர்த்து 
ஆற்றில் இறந்குவோமென்று...

இரண்டாவது தலைமுறையோ
ஆற்றில் இறங்கினால்
ஆறு அடித்து சென்றுவிடலாம்
ஆபத்து வரும் வராது
கடவுளை வணங்கி
ஓடத்திலேறி கடக்கலாமென்று...

மூன்றாவது தலைமுறையோ
ஓடத்தில்போனாலும்
ஆறு அடித்து சென்றுவிடலாம்
ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி
அதற்கொரு பூஜை போட்டு
அதன்மேல் நடந்து போய்    
அழகாய் ஆற்றை கடக்கலாமென்று..

நான்காம் தலைமுறையோ
சிந்தனையில் இருந்தது...
இவர்கள் தேங்காய் உடைக்குமுன்   
ஹெலிகாப்டரில் ஏறி
அரை நொடியில் போகலாம்
ஆற்றைக்கடந்து என்று...

மெஞ்ஞானத்தை
விஞ்ஞானம் வென்றது
கால நீரோட்டத்தில்
கடவுளும் காணாமல் போவார். 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1