google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காணவில்லை என் காதலியை

Monday, May 28, 2012

காணவில்லை என் காதலியை

 
என் காதலை தூண்டியவள்
வாலிபத்தை தீண்டியவள்
வருவாள் போவாள் கனவில்....
இபோதெல்லாம் வருவதில்லை
காரணமும் தெரியவில்லை
காணவில்லை என் காதலியை

காவல் துறையில் புகார் கொடுத்தால்
கண்டுபிடித்து தருவார்களா?
(கண்டுபிடிப்பார்கள்
ஆனால் தருவார்களா?
அது தெரியாது)

ஆட்சியரிடம்
மனுகொடுக்கலாமா?
(கொடுக்கலாம்
ஆனால் நீ போகும்வரை
இருப்பாரா அவர்
இடம் மாறாமல்?)

கோட்டையில் கொடுக்கலாமா
கோரிக்கைமனு?
(கொடுக்கலாம்தான்   
ஆனால் அவர்களே
அவ்வப்போது வரும்
காய்ச்சல்களால்
அரண்டுகிடக்கிரார்கள்
நீ போனால் உன்னை
பிராண்டிவிடுவார்கள்)

அப்படியென்றால்
என்னதான் பண்ணுவது
என் காதலியை கண்டுபிடிக்க?
(மதுரைக்கு போ
புதுசா யாரோ
ஆனந்த சாமியார்
வந்திருக்கிறாராம்
அவரிடம் நிறைய
பக்தைகள் உண்டு
மடத்தில் சேர்ந்துவிட்டாளா?
என்றுபார் மடச்சாம்பிரானியே!)   
  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1