நாளும் விழித்தவுடன்
இந்திய தேசத்தில் நீ
இருக்குமிடம் வணங்கிவிடு
நாட்டு நலனுக்கு பாடிவிடு
நல்லதொரு வாழ்த்துப்பா!
சுதந்திரத்தை சுவாசிக்க வைத்த
சுதேசி தலைவர்களை போற்றிவிடு!
சந்திக்கும் அனைவரையும்
சாதிமத வேற்றுமையின்றி
சகோதரராய் நினைத்துவிடு
சண்டை சச்சரவு தவிர்த்துவிடு
சமுக ஒற்றுமை வளர்த்துவிடு
உன் வீட்டு சுவற்றில்
கீறல் விழுந்தால்
விடுவாயா நீ?
நாட்டு சொத்து நழிந்திட
நினைக்கலாமா?
நினைப்போரை தடுத்திட
தயங்கலாமா?
இல்லாததை இருப்பதாகவும்
பொல்லாததை நல்லதாகவும்
பொறுப்பின்றி பேசிதான்
பொழுதை கழிக்கலாமா?
ஜனநாயகம் சமுத்திரத்தில்
சாக்கடைகள் கலந்திடத்தான்
வாக்குகளை விற்கலாமா?
நலிந்தொரை உயர்த்திவிடும்
வலியோராய் வாழ்ந்துவிடு
வாழ்க்கையில் வீழ்ந்தோரை
எழுந்து நிற்க ஏதேனும் செய்
எவர்தம் இதயம் துடிக்கிறதோ
இந்தியா இந்தியா என்று
அவர்தம் வாழ்வில் வருமே
வளங்கள் யாவும் நன்று!
நீயே இந்தியா! நீயே இந்தியன்!
*******************************************
காணொளி-சிந்து நதியின் மிசை..........
Thanks-YouTube
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |