google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நீயின்றி இல்லை இந்தியா!

Wednesday, June 27, 2012

நீயின்றி இல்லை இந்தியா!



எழுந்துவா இளைய சமுதாயமே!
ஊழல் பெருச்சாலிகளை
ஒழித்துகட்ட ஓடோடிவா  
நீயின்றி இல்லை இந்தியா!
நல்லதோர் நாடு செய்வோம்

பழம் தின்று கொட்டைபோட்ட
ஊழல் பெருச்சாலிகள்
உண்டு இங்கே நிறைய
பொறிகளில் மாட்டினாலும்
பசியடங்க மாட்டார்கள்  
பொறியையும் விழுங்கிவிட்டே
பெருமூச்சு விடுவார்கள் 
சட்டத்தின் சந்து பொந்துகளை
சரியாக அடைத்து வைத்திடு!

சுண்டெலிகள் சிலவுண்டு
சில்லரையாக சுரண்டித்தான்
சிலகாலம் வாழ்வதுண்டு
ஒருநாளில் அவைகள்தான்
பெருச்சாளியாக மாறுவதுண்டு
பெரிய தொல்லை தருவதுண்டு  
சுண்டெலிகள் என்றுதானே நீயும் 
சுரண்டல் எலிகளை விட்டுவிடாதே  

எழுந்துவா இளைய சமுதாயமே!
நீயின்றி இல்லை இந்தியா!
நல்லதோர் நாடு செய்வோம் 
***************************************
காணொளி-எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்  


Thanks-YouTube


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1