அரசுக்கு ஆலோசனை
சொல்ல
அறிவாளிகள் வேண்டுமென்று
அவசர அறிவிப்பு வந்தது
வந்ததே மாபெரும்
கூட்டம்
வந்தவரிடமெல்லாம்
முட்டை ஓன்று
கொடுத்து
என்ன முட்டை அது?
என்று கேட்டனர்
அதிகாரிகள்
வந்தவர்களில்
பலர்
வாத்து முட்டை
என்றனர்
இன்னும் சிலர்
சொன்னாரே
இது கோழி முட்டை
என்று
அதிலும் சிலரோ அதை
ஆமை முட்டை என்றனரே
கூட்டத்தில்
சிலரோ கோபத்தில்
கூமுட்டை என்று
கோசமிட்டனர்
எல்லோரும் தவறு
என்று
அடித்து விரட்டினர்
அதிகாரிகள்
அதில் ஒருவர்
மட்டும் சொன்னார்
அது குதிரை
முட்டை என்று
அவரே சரியாக
சொன்னாரென்று
அவருக்கே
பதவியும் பதக்கமும்
(இது நம்ம நாடு
இல்லிங்கோ)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |