சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் நடப்பது நாட்டில்
பெண்களுக்கு இழைக்கப்படும்
பாலியல் வன்கொடுமைகளும்
பாலியல் படுகொலைகளுமே!
ஆத்திகர் நாத்திகர்
அரசியல்வாதி சுயநலவாதி
பாமரர் படித்தவர்
என்ற பேதம் இல்லாமல்
இந்தப் பேய்களின் தொல்லையே!
பனைமரத்திலிருந்து
பிய்ந்து கீழே விழும்
சில்லாட்டைகள் தெரியும்
நள்ளிரவில் நிலவொளியில்
பறந்து வரும் பேய்போல.......
சில்லாட்டையாவது
சல்லடையாக உதவும்
ஆனால்
காமவெறியுடனும்
கொலைவெறியுடனும்
பறந்து திரியும்
இந்த சில்லாட்டை பேய்களோ
சமுதாயத்தை சீரழிக்கும்
சட்டங்களை திருத்த வேண்டும்
சீரழியும் சமுதாயத்தை
சீர்தூக்கி நிமிர்த்திடவே
கொடுமை செய்யும் இப்பேய்களை
கடுமையாக தண்டிக்க வேண்டும்
(சில்லாட்டை= பன்னாடை)
************************************
காணொளி-SOCIAL ILLICIT.....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |