கரகாட்டம் ஒயிலாட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
எந்த ஆட்டமும் போடுங்கள்
எருதாட்டம் மட்டும் கூடாது
என்று சொன்னது சட்டம்
எழுச்சிகொண்டது மக்கள் கூட்டம்
அடக்க நினைத்தது காவலர் கூட்டம்
அங்கே நடந்தது ஒரு சிலம்பாட்டம் ஆட்டம்போட
கூட்டிவந்த மனிதர்கள்
அடிவாங்கிக்கொண்டு
அங்கும் இங்கும்
அலறியடித்து
ஓடுவதைப்பார்த்து....
கட்டிப்போட்ட
எருதுகள்
எட்டிப்பார்த்து
சிரித்தன.....
எருதாட்டம்
என்றுசொல்லி
பொய்யாட்டம்
ஆடுகிறார்கள்
*******************************************
காணொளி-அண்ணாச்சி வேட்டிகட்டும்.......
Thanks-YouTube-Uploaded by hondabalu on Mar 16, 2009
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |