தலை வாழை
இலை
போட்டு
பொன்னி
அரிசியில்
சோறு
படைத்து
பொரியல் அவியல்
அப்பளத்தோடு
அறுசுவை
உணவு
ஆனாலும்
உண்ண
முடியவில்லை
வாயில்
வைத்த
ஒருபிடி
சோறும்
விழுங்க
முடியவில்லை
தொட்டுக்க வைத்ததோ
ஊறுகாய் அல்ல அசிங்கம்
இதுதான் சமபந்தி விருந்து
சாதி மதம் இல்லாத நாட்டில்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும்
சமமாக அமர்ந்து உண்பதாய்
படமெடுத்து பிரசுரிக்கும்
பெரிய மனிதர்களின் விருந்து
************************************
காணொளி-எத்தனை பெரிய மனிதருக்கு...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |