google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எழுத்தால் எச்சமிடாதீர்கள்

Wednesday, July 11, 2012

எழுத்தால் எச்சமிடாதீர்கள்


தமிழ்-
ஒரு அழகிய பூஞ்சோலை
இதில் பூஞ்செடிகள்
பதித்தவர்கள் ஏராளம்
உயிரை உரமாக்கியவர்கள் ஏராளம்
உதிரத்தால் வளர்த்தவர்கள் ஏராளம்

கவிஞர்களே! வாருங்கள்!

உங்கள் வார்த்தைகளை
வள்ளுவர் போல் அளந்துபோடுங்கள்!
பாரதி போல் பார்துப்போடுங்கள்!

உங்கள் அகராதியில்
விரசமிருந்தால் விட்டுவிடுங்கள்
அகந்தையிருந்தால் அழித்துவிடுங்கள்
விவேகத்தை சேர்த்துகொள்ளுங்கள்  

வதந்திகளை விலக்கிவிட்டு
போலிகளை தள்ளிவிட்டு
உண்மையை கவசமிடுங்கள்

முடிந்தால் களை எடுங்கள்
நீங்களே களையாகாதீர்கள்!
எழுத்தால் எச்சமிடாதீர்கள்!
*********************************
காணொளி-சங்கே முழங்கு..........

Thanks-YouTube-Uploaded by on Jul 23, 2011

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1