google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அம்மா சொன்னக்கதை

Tuesday, July 03, 2012

அம்மா சொன்னக்கதை



தந்தனத்தோம் என்று சொல்லியே நானும்
கதை சொல்லப்போறேன் நீயும் கேளு!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு சோம்பேறியாம்  
அவனுக்கு நடந்ததாம் திருமணம்
அடுத்தநாள் கேட்டாளாம் அவன் மனைவி  
என்ன செய்யப்போகிறாய் என்றுதான் அவனிடம்  
ஆடு வாங்கப்போகிறேன் அதுக்கு வேண்டும் காசு...

(இந்த ஆடுமாடு கதையெல்லாம்
இங்கே வேண்டாம் இனியும்  
இது எங்க அம்மா சொன்னக்கதை)

அடுத்த கதை சொல்லுகிறேன்
அது ஒரு குட்டி கதை
அய்யன் வள்ளுவர் வாக்கினிலே...

(இந்த கதையும் இங்கே வேண்டாம்
இது எங்க அப்பா சொன்னக்கதை)

இன்னொரு கதை சொல்லுகிறேன்
இது ஒரு பேய்க்கதை

(இந்த கதையும் இங்கே வேண்டாம்
இது எங்க பாட்டி சொன்ன பழையகதை

இப்படி கதை கேட்டு கதை கேட்டு
எங்க கதை சோகக்கதையானதே!
கதை கேட்ட நாங்கள் தூங்கிவிட்டோம்
கதை சொன்ன நீங்கள் விழித்துக்கொண்டீர்
விழித்துக்கொண்ட நீங்கள் சுருட்டிக்கொண்டீர்
தூங்கிவிட்ட நாங்கள் சுருண்டுவிட்டோம்)  
****************************************
காணொளி-தூங்காதே தம்பி தூங்காதே.......

 

Thanks-YouTube




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1