google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அன்னா நூலகமும் அதோ கதியும்

Wednesday, July 04, 2012

அன்னா நூலகமும் அதோ கதியும்





மழுங்கிவிடாமல்
அவ்வப்போது அறிவை
செம்மைப்பட தீட்டும்
சானைக்கல்லே நூலகம்

ஊருக்கு ஒரு கோயில் படைத்து
உன் வாழ்க்கையை விதியென்று
அவர் வாழ்க்கையை வளப்படுத்தி
சமுதாயத்தை சீர்குழைத்தார்

நூலகமில்லாத ஊர்களே
நாட்டில் எதுவுமில்லையா?
ஊருக்கு ஒரு நூலகம் படைத்து
அறிவு பொக்கிஷங்களை
அதனுள் அடுக்கிவைத்து  
நம் வாழ்க்கையை சீர்படுத்த 
நாட்டில் எவரும் இல்லையோ?

நூற்றி எழுவது கோடிக்கு
நூலகம் ஒன்றே ஓன்று
ஓரிடத்தில் கட்டிவைத்து
பெருமைதனை பேசியவர்கள் அன்று
ஒப்பாரிதான் வைக்கிறார்களே இன்று 

நன்றாகத்தான் இருக்கிறது நூலகம் 
குமரியிலிருந்து குமரனோ குமரியோ 
அறிவைத்தேடி சென்னைக்கு
அலையத்தான் முடியுமா?   

அறிவுக்கோயில் அது
ஆனதே குப்பைமேடு என்று
அறிவிக்கை விடுகிறார் ஒருவர்
நீதிமன்றம் தடை விதித்தது என்று
நெஞ்சை நிமிர்த்துகிறார் ஒருவர்

அந்த ஆட்சியில் நட்ட மரத்தை
இந்த ஆட்சி வெட்டி வீழ்த்துவதும்
இந்த ஆட்சியில் நட்ட மரத்தை.....
அடுத்து வரும் ஆட்சி

நூலகமில்லாத ஊர் இனி வேண்டாம்
தெருவுக்கு தெரு நூலகமிருந்தால் 
தீருமே அறிவுப்பஞ்சம் இங்கே!  



*******************************
காணொளி-நல்லதோர் வீணை செய்து......


Thanks-YouTube

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1