google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: படைத்தவர் யாரோ?

Saturday, July 07, 2012

படைத்தவர் யாரோ?



இந்த உலகை படைத்தது
யார் என்று தெரியவில்லை
யாரவது இருக்கட்டும் 

அழகான காடுகளை படைத்து
அதனில் நிறைய
மரங்களை வளர்த்து
மனிதன் கையில்
கொடுத்தவர் எவரோ?

அத்தனை மரங்களையும்
அழித்துவிட்டான் மனிதன்
ஆடம்பர பங்களாவில்
கதவுகளும் ஜன்னல்களுமாக
அவைகள் மாறிவிட்டனவே!

இருக்கும் மரங்களையும்
எப்போது அழிக்கலாம்?  
என்று அலைகிறான்

நல்லவேளை சூரியனே!  
நீ சுடுகின்றாய்.
சுட்டெரிக்கும் உன்னை
விட்டுவிட்டான்
இல்லையேல்
நிலவில் வந்து தேடியதுபோல்
உன்னிடமும் வந்திருப்பான்.
******************************
காணொளி-செந்தாழம்பூவில்..........

Thanks-YouTube
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1