கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து
கல்லெடுத்து எறியும்
அம்மா மம்தாஜி அவர்களே
அரசியல்வாதியாக இருந்தும்
அரசியல்வாதிகளையே
ஆய்வு செய்கிறீர்களே
இருக்கு அவர்களுக்கு எலும்பு
முன்னாடி முதுகில் இருந்தது
பிழைப்புக்காக அரசியல் செய்தபோது
பின்னாடி அது போய்விட்டது
வாலாக வளர்ந்துவிட்டது
வளர்ந்த வாலை வைத்து
அனுமார் அழித்ததை போல
அழிக்கிறார்கள் மக்களை
சுருட்டுகிறார்கள் இந்தியாவை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இரண்டுவரியில் எழுதினார் வள்ளுவர்
அன்றைய அரசர்களைப்பற்றி
அதுவே பொருந்தும் இன்றும்
இன்றைய அரசியல்வாதிகளுக்கு
இந்த முதுகெலும்பில்லாதவர்களுக்கு
இலவசமாக கொடுப்போம் திருக்குறளை
யாரென்று சொல்லுங்கள் மம்தாஜி?
முடிந்தால் படிக்கட்டும் இல்லையேல்
தலைக்கு வைத்து தூங்கட்டும்
முதுகெலும்பு வளராவிட்டாலும்
மூளையாவது வளரட்டும்
*********************************
காணொளி-பிறக்கும்போது......
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |