google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மம்தாஜியும் முதுகெலும்பில்லாதவர்களும்

Monday, July 09, 2012

மம்தாஜியும் முதுகெலும்பில்லாதவர்களும்



கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து
கல்லெடுத்து எறியும்
அம்மா மம்தாஜி அவர்களே  
அரசியல்வாதியாக இருந்தும்
அரசியல்வாதிகளையே  
ஆய்வு செய்கிறீர்களே

இருக்கு அவர்களுக்கு எலும்பு
முன்னாடி முதுகில் இருந்தது
பிழைப்புக்காக அரசியல் செய்தபோது
பின்னாடி அது போய்விட்டது
வாலாக வளர்ந்துவிட்டது

வளர்ந்த வாலை வைத்து
அனுமார் அழித்ததை போல
அழிக்கிறார்கள் மக்களை
சுருட்டுகிறார்கள் இந்தியாவை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இரண்டுவரியில் எழுதினார் வள்ளுவர்
அன்றைய அரசர்களைப்பற்றி
அதுவே பொருந்தும் இன்றும்
இன்றைய அரசியல்வாதிகளுக்கு  
இந்த முதுகெலும்பில்லாதவர்களுக்கு
இலவசமாக கொடுப்போம் திருக்குறளை
யாரென்று சொல்லுங்கள் மம்தாஜி?

முடிந்தால் படிக்கட்டும் இல்லையேல்
தலைக்கு வைத்து தூங்கட்டும்  
முதுகெலும்பு வளராவிட்டாலும்
மூளையாவது வளரட்டும்  
*********************************
காணொளி-பிறக்கும்போது......


Thanks-YouTube-Uploaded by on Jun 8, 2009  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1