எங்க வீட்டு நாய்
செத்துப்போனது
தெருவில் கிடந்த
அனாதைக் குட்டி நாய்
என் ஆதரவோடு வளர்ந்தது
நாளும் தன் வாலையாட்டி
நன்றிதனை சொல்லுமே
திருடர் வந்தாலும்
அவரிடமும் கொஞ்சுமே
எங்க வீட்டு நாய் செத்துப்போனது
எல்லோரிடமும் சொல்லிவிட்டேன்
எல்லோரும் வந்தார்கள்
என் உற்றார் உறவினர்கள்
எனக்கு தெரிந்த நண்பர்கள்
அடக்கத்துக்கு நேரம் குறித்தார்கள்
எந்த வழக்கப்படி அடக்கம் செய்வது?
ஆலோசனை செய்தார்கள்
அங்கேதான் ஆரம்பமானது
அடிபுடி தகராறு....
எல்லோரும் போய்விட்டார்கள்
அடக்கம்தான் செய்துவிட்டேன்
வீட்டு பின்புறமிருந்த மரத்தடியில்
மரத்துக்கு உரமாக....
முடிவும் செய்துவிட்டேன்
என்மரனத்தை, மகனே!
யாரிடமும் சொல்லாதே
இறந்தவுடன் புதைத்துவிடு
ஏதேனும் ஒரு மரத்தடியில்
மரத்துக்கு உரமாக.....
************************************
காணொளி-வாழ்வில் காணா....
Thanks-YouTube-Uploaded by arunzen on Feb 27, 2010
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |