உங்கள்
வாகனப்புகையிலும்
குழிவிழுந்த
சாலைப்புழுதியிலும்
சிக்குவிழுந்து
கிடக்கின்றதே
எங்கள் சிங்கார
தலைகள்
சீர்குலைந்து
கிடக்கின்றதே
எங்கள்
சின்னஞ்சிறு இலைகள்
கிராமத்து
கனிதரும் மரங்களல்ல
உங்கள் நகரத்தை
அழகுசெய்ய
நீங்கள்
நட்டிவைத்த மரங்கள்
நாங்கள் நகரத்து
மரங்கள்
வாகனங்களின்
வக்கிர
இறைச்சல்களில்
தொலைந்துபோகிறது
எங்கள் தென்றல்
ராகம்
தள்ளாடுகிறது
எங்கள்
தாலாட்டுப்பாடல்
நிழல் தரும்
மரங்கள் நாங்கள்
நிற்கமாட்டீர்கள்
யாரும் நீங்கள்
அவசரவேலை
உங்களுக்கு
எந்த கத்திரிவெயிலுக்கும்
சுகம்தருவோம்
நாங்கள்
ஆனாலும் நீங்கள்
அடைந்து
கிடப்பீர்கள்
குளிர்சாதன
அறைக்குள்
நகரத்து சாக்கடை
நீரைஉறிஞ்சி
நாறுகிறது எங்கள்
தேகமும்
நகரத்து நச்சு
காற்றால்
நாசமானது எங்கள்
சுவாசமும்
அடுத்து மழை வரும்
நாளுக்கு
ஆவலோடு
காத்திருக்கிறோம்
அழுக்கு தேகத்தை
அலசிடவே
அடமழைதான்
பெய்யாதோ!
********************************
காணொளி-திரு.நம்மாழ்வார்,இயற்கை விஞ்ஞானி
Thanks-YouTube-Uploaded by mndheenathayalan
on Jul 30, 2008
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |