எழுதிக்கொண்டிருந்தேன்
ஊடல்
கொண்ட
காதலிக்கு
கடிதம்
கவிதைவடிவில்
என்
இதயத்தைபோல்
புழுக்கமாக
இருந்தது
‘கதவைத் திறங்கள்
காற்று
வரட்டும்”
நித்தமும்
ஆனந்தம்
தரட்டும்
நினைவு
வந்ததால்
திறந்தேன்
கதவை...
வந்ததோ
ஒரு நாய்குட்டி
என்ன
எழுதுகிறேன் என்று
எட்டிப்பார்த்தது
எழுதியவைகளை
படித்துப்பார்த்தது
“போயா காதலும்
உன்
கவிதையும்” என்று
காகிதம்
மீது காலைத்தூக்கி....
நீர்க்கோலம்போட்டு
ஓடியது
ஓலமிட்டு
அட..நாய்க்கு
தெரியுமா
காதல்
வாசனை?
(முகர்ந்து
பார்த்தேன்
நாற்றமெடுத்தது
காகிதம்)
எடுத்துவிட்டேன்
அடுத்த
காகிதத்தை
எழுதிவிட்டேன்
அன்பே
என்று...
(இது நகைச்சுவைக்காகவே.
மற்றபடி காதலர்கள்
காதல் கவிஞர்கள்
கோபித்துக்கொள்ளவேண்டாம்)
*********************************
காணொளி-நான் கவிஞனுமில்லை.....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |