google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சபலம் சஞ்சலம் சங்கடம்

Friday, July 13, 2012

சபலம் சஞ்சலம் சங்கடம்



பருவ மங்கை
பக்கத்தில் வந்தால்
பாவி மனசு 
படபடக்குதே!

சிவத்த சுந்தரி
சிரித்து நின்றால்
சின்ன இதயம்
சிதைந்துப்போகுதே!

சேலை கட்டிய
சிங்காரி போனால்
இதயத்துடிப்பு
இல்லாமல் போகுதே!

(தப்பு அய்யா தப்பு
இந்த நினைப்பு உமக்கு  
இந்த நாட்டில்
நீரோ பெரியமனிதர்
இந்த அலுவலகத்தில்
நீரோ பெரிய அதிகாரி

இருக்கு நாட்டில் சட்டம்
மயங்காதீர் மகளிரைக் கண்டு 
மகளீர் புகார் கொடுத்தால்
மண்டை போகும் உடைந்து 

மடாதிபதியானாலும்  
மன்னைக் கவ்வ வேண்டும்
கோடிகள் வைத்திருந்தாலும்
கேடிகள் வரிசையில் சேரவேண்டும்

அதிபரேயானாலும்
அசிங்கம் வந்து சேரும்
ஆளுனர்கூட அடிசறுக்கியதுண்டு 
சட்டசபை உறுப்பினர்கள் பலர் 
சங்கடத்தில் சிக்கியதுண்டு 
பெரிய அரசாங்கங்களே 
அந்தரங்கத்தில் புதைந்ததுண்டு

அகத்தின் அழகு  
முகத்தில் தெரியுதே
துடைத்துக்கொள்ளும்.
தெரிந்துகொள்ளும்
சபலம்-சஞ்சலம்-சங்கடம்)
*****************************
காணொளி-No eve-teasing...


Thanks-YouTube-Published on Mar 5, 2012 by EvaMotionStudios


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1