என் முதலாளிக்கு
எப்போதாவது வரும்
தொழிலாளி பாசம்....
தீடீரென்று ஒரு
நாள்
அமெரிக்கா போகச்
சொல்லி
ஆணையிட்டார்...
சுற்றுலாப்
பயணமாகாத்தான்
என்னிடமோ
பயணப் பத்திரம் இல்லை
முகவர் ஒருவரை
பிடித்து...
பயணப் பத்திரம்
வந்தபோது
பயனத்தேதி முடிந்து
விட்டது
பயணம் போனவர்கள்
பயணம் முடிந்து
திரும்ப வந்து
விட்டார்கள்
அடுத்து சில
மாதங்களில்
மீண்டும் ஒரு பயண
வாய்ப்பு
இது பாரிஸ்-லண்டன்
பயணம்
இந்த முறை
என்ன நினைத்தாரோ
என் முதலாளி....
அவருடனே என்னையும்
அழைத்து சென்றார்....
என்னுடன்
பயணித்தவர்கள்
அத்தனை பேரும்
பெரும் முதாலாளிகள்
என்னைத் தவிர...
எல்லோரும் பார்த்த
பார்வை
என்னை ஏதோ செய்தது...
முதலாளிகள் எல்லாம்
ஓன்று சேர்ந்து
கும்மாளமிடுவார்கள்
அனுபவிப்பார்கள்
வேடிக்கை பார்ப்பேன்
நான்
கண்ணில் கண்டதை
வாங்குவார்கள்
விலையை பார்த்து
ஒதுங்கிக் கொள்வேன் நான்
ஒரு வாரத்தில்
பயணம் முடிந்து
சென்னைக்கு
வந்து விட்டோம்...
அன்றே போனேன்
சென்னை பர்மா
பஜாருக்கு
வெளி நாட்டு
பிஸ்கெட்-சாக்லேட்
பெட்டி பெட்டியாக
வாங்கி..
நண்பர்கள் உறவினர்கள்
எல்லோருக்கும்
கொடுத்தேன்
லண்டனில்
வாங்கியதாக....
இந்த பயணத்தால்
எனக்கு உபயோகமில்லை
ஆனால் என் முதலாளியோ
எல்லோருக்கும்
பிரகடனப்படுத்திக்கொண்டார்
தொழிலாளியின்
நேசமிக்க முதலாளி
என்று.
என்னுடன் வேலை
செய்வோருக்கு
என் மீது இருந்த
கொஞ்ச நஞ்ச
விருப்பும்
வெருப்பானனதுதான்
மிச்சம்
இது முடிவல்ல
எரியும் நெருப்பில்
எண்ணை ஊற்றியதுபோல...
இன்னொரு பயணம்
நான்கு ஆண்டுகள்
கழித்து
நான் மட்டும்
தனியாக.....
இந்த முறை நான்
யாருடனும் சேரவில்லை
தனிமையிலே இனிமை?
வெளிநாடு சுற்றுலா
போய்
வாழ்க்கையில் வெறுப்படைந்தது
நானாகத்தான்
இருக்கும்
அடிமைகளை
விலைக்கு
வாங்குவார்கள்
என் முதலாளிக்கோ
இலவசமாக கிடைக்கும்
சுற்றுலா சீட்டுக்கு
நான் விலை
போய்விட்டேன்
இதொரு மாய உலகம்
எதுவும் புரியாது
இதுமட்டுமா
புரிந்துவிடும்?
சில நேரங்களில்
நம் முகமே நமக்கு
அடையாளம் தெரியாது
உலகம்
மாயக்கண்ணாடியோ?
அயிந்து ஆண்டுகள்
கழித்து
இன்னொரு முறை
இதே போல்
ஆரம்பித்தார்
என் முதலாளி....
இந்த முறை...
நானே
முந்திக்கொண்டேன்
பயனப் பத்திரம்
காணாமல் போனதாக....
பூனை கர்ஜனை செய்யாது
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |