இது தத்துவம் அல்ல
ஒரு வலைப்பூ
ஆரம்பித்ததால்
வந்த வினைகள்
வலைப்பூ தந்த
வேதனைகள்
காலையில் எழுந்ததும்
நாளிதழ்களைப் புரட்டி
இன்றைய பதிவுக்கு
எதையாவது தேடி
நாட்டு நடப்புகளை
அளவுக்கு அதிகமாக
மேய்ந்ததால் வந்ததே
ஜீரணிக்க முடியாமல்
அஜீர்ண தொல்லை
அதற்க்கு மேலும்
எழுதி வெளியிட்டால்
கருத்துத் தொல்லை
வாழ்த்துப்பா மட்டுமே
வாசிக்க வேண்டுமெனில்
ஏன் இந்த வேலை?
அதற்க்கு மேலும்
எழுதி வெளியிட்டால்
கருத்துத் தொல்லை
வாழ்த்துப்பா மட்டுமே
வாசிக்க வேண்டுமெனில்
ஏன் இந்த வேலை?
எப்போதும் எதையாவது
நினைத்துக்கொண்டு
கற்பனையில்
வாழ்ந்ததால் ...
இரத்தத்தையும்
சதையையும்
நிஜம் தின்றுவிட்டது
ஆழ்ந்த தூக்கத்தின்
போதும்
இந்த வலைப்பூ வந்து
தட்டி எழுப்பியதால்
தூக்கத்தை
தொலைத்துவிட்டேன்
துக்கத்தை
வாங்கிக் கொண்டேன்
எங்கேயும் பணம்
இங்கேயும்
இந்த வலையுலகிலும்
பணம்...பணம்...பணம்.
அசந்தால்
ஆகிடுவோம் நாம்
பிணம்...பிணம்...பிணம்
***********************
காணொளி-இதுதான் உலகமடா...
Thanks-YouTube- Uploaded by rajshritamil on Jul 21, 2011
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |