google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வலைப்பூ

Tuesday, August 14, 2012

வலைப்பூ



இது தத்துவம் அல்ல  
ஒரு வலைப்பூ
ஆரம்பித்ததால்
வந்த வினைகள்
வலைப்பூ தந்த
வேதனைகள்   

காலையில் எழுந்ததும்
நாளிதழ்களைப் புரட்டி
இன்றைய பதிவுக்கு
எதையாவது தேடி
நாட்டு நடப்புகளை
அளவுக்கு அதிகமாக  
மேய்ந்ததால் வந்ததே
ஜீரணிக்க முடியாமல்
அஜீர்ண தொல்லை 
அதற்க்கு மேலும் 
எழுதி வெளியிட்டால்  
கருத்துத் தொல்லை 

வாழ்த்துப்பா மட்டுமே 
வாசிக்க வேண்டுமெனில் 
ஏன் இந்த வேலை?   

எப்போதும் எதையாவது
நினைத்துக்கொண்டு
கற்பனையில் வாழ்ந்ததால் ...
இரத்தத்தையும்
சதையையும்
நிஜம் தின்றுவிட்டது

ஆழ்ந்த தூக்கத்தின் போதும்  
இந்த வலைப்பூ வந்து
தட்டி எழுப்பியதால்   
தூக்கத்தை
தொலைத்துவிட்டேன்   
துக்கத்தை
வாங்கிக் கொண்டேன்

எங்கேயும் பணம்
இங்கேயும்
இந்த வலையுலகிலும்
பணம்...பணம்...பணம்.
அசந்தால்
ஆகிடுவோம் நாம்
பிணம்...பிணம்...பிணம்  
***********************
காணொளி-இதுதான் உலகமடா...

 


Thanks-YouTube- Uploaded by rajshritamil on Jul 21, 2011

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1