google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காணாமல் போன பனைமரங்கள்

Sunday, September 09, 2012

காணாமல் போன பனைமரங்கள்


எங்க ஊரில் அன்று
காணுமிடமெல்லாம்  
பனை மரங்கள் நிற்கும்
அவை பனை மரங்கள் அல்ல
பணம் காய்க்கும் பண மரங்கள்  
கருப்பட்டி செய்வதே
தொழிலாக இருந்ததால்
வீட்டுக்கு இரண்டு
கருப்பட்டி பரண்கள் இருக்கும்

புது கருப்பட்டிகளை
பரண்களில் அடுக்கிவைத்து
புகையிட்டு பதப்படுத்திய  
பழங்கருப்பட்டிக்கு
விலை அதிகம் சுவை அதிகம்

பனை மரங்கள்
நினைவு தெரிந்த
காலம் தொட்டு
நின்று கொண்டிருக்கும்
என் நினைவில்ல
என் தாத்தா நினைவு

யார் விதைத்தது?
நெடுமரமாய் வளர்ந்து நிற்க
யார் நீர்வார்த்தது? 
யாருக்கும் தெறியாது.

ஆணி வேர் இல்லை
அய்ம்பது அடிக்கு மேல்
அண்ணாந்து பார்க்கும் உயரம்
அழகாய் வளர்ந்து நிற்கும்  

நீர் பாய்க்க வேண்டாம்
களை எடுக்க வேண்டாம்
மருந்து அடிக்க வேண்டாம்
செலவு செய்யாமல்
வரவு தரும் பனை மரங்கள்

வருடத்துக்கு மூன்று மாதங்கள்
வந்து சேர்வார்கள்
பனை ஏறும் தொழிலாளிகள்

இடுப்பில் அருவாப் பெட்டி
அதனுள் கூர் அருவாள்கள்
பாளை இடுக்கும் கடுப்புகள்
தோளில் மூட்டுக்கட்டை
அதிகாலையிலேயே ஆரம்பம்
பதநீர் இறக்கும் லாவண்யம்

ஏறுவதும் இறங்குவதும்
தொழிலும் வாழ்க்கையும்
இரண்டும் ஒன்றுதான் இவர்களுக்கு

சிலநேரங்களில்
கை தவறி விழுந்தால்
முதுகெலும்பு முறிந்துவிடும்
சிலரின் வாழ்வும் முடிந்துவிடும்

ஆபத்தான தொழில்
அதனால்தான் என்னவோ
அடுத்த தலைமுறையில்
அப்படியே அழிந்து போனது
அறிவை புகட்டி
அழித்து வைத்தது
கர்ம வீரரின் கல்வித்தொண்டு
கற்ற தலைமுறை
கடும் தொழிலை கைவிட்டது  

நெடு நெடுவேனே நின்ற
பனை மரங்களை காணவில்லை
பனை மரங்கள் இன்று
தென்னை மரங்களாக...

தென்னை மரங்களோ
வளர்ந்தும் வளராமலும்
காய்த்தும் காயக்காமலும் 
உப்பு தண்ணீர் பாசனத்தில்
தலையை சொரிந்து கொண்டு....
*********************************
காணொளி-PALMYRA TREE

Thanks-YouTube-Uploaded by on May 18, 2010


 Tamil folk songs by Dhanaraj Ramesh
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1