சொல்லுங்கண்ணேன் சொல்லுங்க!
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
தமிழன் என்று சொல்லடா!
தமிழ் நாட்டில் மட்டும் சொல்லடா!
இலங்கையில் போய் சொன்னால்
இருக்க இடம் இல்லாமல் போவாயடா!
தலை நிமிர்ந்து சொன்னால்
தலையே இல்லாமல் போவாயடா!
கேரளாவில் போய் சொன்னால்
கேவலப்பட்டு போவாயடா!
கர்நாடகாவில் போய் சொன்னால்
கல்லெறி பட்டு வருவாயடா!
ஆந்திராவில் போய் சொன்னால்
அடிபட்டு அல்லல்பட்டு போவாயடா
மும்பாயில் போய் சொன்னால்
வம்பாகி தும்பாகி போகுமடா
தலைநகரில் போய் சொன்னால்
தன்மானம் கெட்டு போவாயடா
வெளிநாட்டில் போய் சொன்னால்
வேதனையும் சோதனையும்தான்டா
அப்படியில்லை அண்ணேன்
சொல்லுங்கண்ணேன் சொல்லுங்க!
இப்படி சொல்லுங்க-
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
**************************
இந்த காலம்
இனி வாராதோ?
Thanks-YouTube-Uploaded by tamilmovies
Thanks-soundcloud-Roja by Deepu Shaji
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |