google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அவனும் அவன் மனைவியும்

Wednesday, October 24, 2012

அவனும் அவன் மனைவியும்




அந்த மனிதன் தன் மனைவியுடன்
எங்கே போகிறது? என்று தெரியாத 
ஒரு நெடிய சாலையில் பயனித்தப்போது....

தங்கமும் முத்துக்களும் பதிந்த
ஒரு பளிங்குமாளிகையின்
வாயிற்கதவைக் கண்டான் .

வாயிற்காப்போனிடம் கேட்டான்
இந்த வழி எங்கே போகிறது?

இது சொர்க்கத்துக்குப் போகும் வழி
என்று சொன்ன வாயிற்காப்போனிடம்
தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டான்

உள்ளே சென்று அருந்திக்கொள்
ஆனால்வ்வொருவராகத்தான் 
உள்ளேப் போகவேண்டும் 
இருவரும் இணைந்து செல்ல   
இங்கே அனுமதியில்லை!

இத்தனைக் காலமும் உறுதுணையாக இருந்த
மனைவியைப் பிரிந்து செல்ல மறுத்த அவன்
மீண்டும் தொடர்ந்தான் வழிப்பயனத்தை...

சிறிது நேரப் பயணத்தில் கண்டான்
சேரும் சகதியும் நிறைந்த வழி
வாயிற்கதவு இல்லாத பண்ணை

அங்கே மரத்தடியில் நின்றவனிடம்
இந்த வழி எங்கே போகிறது? என்றவன்
தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டான்
இது சொர்க்கத்துக்குப் போகும் வழி
என்ற அந்த மரத்தடி மனிதன்

உள்ளே இருக்கிறது தண்ணீர் தொட்டி
உன் மனைவியோடு சேர்ந்து
உன் தாகத்தை தீர்த்துக்கொள்
அன்போடு அனுமதித்தான்

இரண்டு சொர்க்கங்களா? என்று
குழம்பிய வழிப்போக்கனிடம்
அந்த மரத்தடி மனிதன் சொன்னான்  

அந்தப் பளிங்கு மாளிகை
உண்மையான சொர்க்கம் அல்ல
உண்மையில் அது நரகம்

கணவனும் மனைவியும் 
இணைந்து வாழ்வது சொர்க்கம் 
கணவனும் மனைவியும் 
பிரிந்து வாழ்வது நரகம்   

 

             Thanks-YouTube-Uploaded by Varghese Dharma Raj


*****************************************************************************




யோவ்.....பரிதி 
கதையை
மாற்றிச்  சொல்லு...... 

இப்போதெல்லாம் 
சில  மனைவியர்களுடன்
இணைந்து வாழ்வதே நரகம்  

நீ எந்த ஊர்ல  இருக்க?




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1