google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நான் கடவுள் பேசுகிறேன்

Tuesday, October 23, 2012

நான் கடவுள் பேசுகிறேன்




காவல்துறை அலுவலகத்தின்
தொலைபேசி அலறியது

வணக்கம்
உங்கள் நண்பன்

காவல்துறை அலுவலகம்

நான் கடவுள் பேசுகிறேன்
ஒரு புகார் அளிக்க வேண்டும்

உங்கள் பெயர்?

கடவுள்

உங்கள் முகவரி?

மேல் உலகம்

உங்கள் புகார்?

பூலோகத்தில் இருக்கும்
பரிதி.முத்துராசன் என்ற பதர்  
என்னையும் என் பிரதிநிதிகளையும்
வலைப்பூவோ? காகிதப்பூவோ?
அவ்வப்போது நையாண்டி செய்து
எதையாவது எழுதி
என் பிரானை வாங்குகிறான்.

பகுத்தறிவு பகுக்காத அறிவு
ஏதோ சொல்லி என் பக்தர்களை   
என்னிடமிருந்து பிரிக்கிறான்

அவனை ஒரு பத்து நாளைக்காவது
உள்ளே வைக்க முடியுமா?

அய்யா கடவுளே!
நீங்கள் நேரில் வந்துதான்  
புகார் அளிக்க வேண்டும்

எனக்கு நிறைய வேலை இருக்கு
என்னால் நேரில் வர முடியாது
வேண்டுமென்றால்
என் பிரதிநிதிகள் 
பூலோகத்தில்தான் உள்ளனர் 
அவர்களை அனுப்புகிறேன்

அய்யா கடவுளே!
புகார் செய்பவர்களும்
நேரில் வரவேண்டும்

தொலைபேசி
துண்டிக்கப்பட்டது.

(கடவுள் நேரில் வருவாரா?
வந்தால்..பாவம் பரிதியின் பாடு!)


                 Thanks-YouTube-Uploaded by ponmaran


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1