google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கனவில் வந்தார் சாக்ரடீஸ்

Saturday, October 27, 2012

கனவில் வந்தார் சாக்ரடீஸ்



நேற்று கனவில் வந்தார்
கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்
கிறங்கிப்போச்சு என் தலையும்
நான் பெற்ற அவஸ்த்தையை
நீங்களும் பெறவேண்டுமெனில்
மேலும் படியுங்கள்.....

அன்பும் அம்பு போன்றதுதான்
நம்மைவிட்டுப் போனது
நம்மிடம் திரும்ப வராது.   

நண்பர்களால்
காயம்படும் போதும்
மன்னித்துக்கொண்டிருந்தால்
நம்மை நல்ல நண்பன் என்பார்கள்

ஒரு நொடியில் செய்த தவறு
ஆயுசுக்கும் நம்மை அச்சுறுத்தும்

நேசித்தவர்களைப் பிரியும்போது
அன்பான வார்த்தைகளை
விதைக்கவேண்டும்
என்றாவது ஒருநாள் சந்திக்கும்போது
அவை கனி தரும் மரமாயிருக்கும்

கொஞ்ச நேரம் நடை பயின்றால்
நிறைய நேரம் நலம் தரும் உடலுக்கு
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால்
நிறைய நேரம் ஆனந்தம் தரும் உள்ளத்துக்கு

சிலநேரங்களில் நம் கோபம்
நியாயமாகத் தெரியும்....
அதற்காக ஆத்திரப்பட்டால்
அநியாயத்தில் முடியும்

நம்மை நாமே மன்னிக்க தெரிந்தால்  
அடுத்தவர்களை மன்னிக்க முடியும்    

அடுத்தவரின் ரகசியத்தை 
அறிந்திட துடிப்பது.... 
தனது ரகசியங்களை 
பாதுகாக்க தெரியாது 


(யப்பா.....போதும்பா....
இதுக்கு மேலும் வேண்டாமப்பா
இப்போதுதான் தெரிகிறது
ஏன் அவரை கொன்றார்கள்
விஷம் கொடுத்து என்று)  

************************************************

நேர்மையான  காவலர்களே!
வன் கொடுமையோ?
பன் கொடுமையோ? 
இப்படி பதிவெழுதும் பதிவர்களை 
உள்ளே தூக்கி போடமாட்டீர்களா?
கணம் நீதிமான்களே!
இவருக்கு அயிந்து வருடங்கள் போதாது 
ஆயுசுக்கும் உள்ளே கிடக்க 
சட்டத்தில் ஏதும் வழியிருக்கா?  

அது  சரி...நீ யாரம்மா?

பாண்டியர் அரசவையில் 
ஆசானப் பாடகியாக இருந்த 
பிரபல பாடகியின் கொள்ளுப்பேத்தி!
இந்த  பதிவர் மறைமுகமாக 
என்னைப் பற்றி எழுதியதால் 
எனக்கு மண உளைச்சல்....
தொண்டை கட்டிக்கொண்டது 
என்னால்  பாட முடியவில்லை 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1