எத்தனை முறை
போராடினாலும்
தோல்விதான் பரிசா?
(சுயநலவாதிகளின்
போராட்டங்கள்
ஒரு பயனும் தராது)
எவ்வளவு நேரம்
நீந்தினாலும்
அக்கறையை
அடைய முடியாதா..?
(நீந்துவது போல்
கற்பனை செய்தால்
காரியம் ஆகாது)
எந்தக் கல்லை
செதுக்கினால்
வரம்தரும் கடவுள்
வருவார் இங்கே?
(ஆருடம் பார்த்தால்
ஆவது ஒன்றுமில்லை)
ஏன் இந்த முகாரி..?
காவேரியை
நினைத்தாலே
தண்ணீர் வருகிறதோ
இல்லையோ
கண்ணீர் வருகிறது.
காணவில்லை
காவேரியை...
(காவல் நிலையத்தில்
புகார் கொடு
கண்டுபிடித்துத் தருவார்கள்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |