ஆண் பெண் வேறுபாடின்றி
அனைவர் தலைகளிலும்
வந்து உதிக்கும் வானவில்...
நவ நாகரிகத்தின்
உச்சமோ? எச்சமோ?
தலைச் செடியில்
விதவிதமான வர்ணங்கள்
எழில் மிகு கோலங்கள்
எத்தனை வித ஜாலங்கள்
எண்ணிலடங்கா மாயங்கள்
இனி யாரும்
இதைச் சொல்லி
மரியாதை இன்றி
பேசக்கூடுமோ...?
அன்று
பாண்டிய மன்னவனுக்கு
எழுந்த சந்தேகம்
இன்று அவன் இருந்தால்
என்ன சந்தேகம் வருமோ...?
(யோவ்....பரிதி!
இப்படியெல்லாம்
பதிவு எழுதி
எங்கள் தலையை
ஏன் சொரியவைக்கிற...?)
அது சரி...
இப்பல்லாம்
வாரப்பத்திரிகைகளில்
இப்படித்தான் எழுதி
சுழற்சியும் சுற்றோட்டமும்
செய்யுறாங்க...
நான் மட்டும் எழுதினா தப்பா?
***************************************************************************
இன்றைய சிரிப்பு பீரங்கி...
*****************************************************************************
நகைக்கடைக்காரர்-
இந்த நெக்லஸ் எடுங்கம்மா
அதுக்குச் செய் கூலி இல்லை
சேதாரமும் இல்லையம்மா
(அருகில் இருந்த கணவன் மனதில்
நினைத்துக்கொண்டான்
அது சரி...சேதாரம் உமக்கில்லை
எனக்குத்தான்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |