div style="background:url (http://cdn.oddstuffmagazine.com/wp-content/uploads/2012/11/mug_of_beer1.jpg)no-repeat;"> எச்சரிக்கை-
குடி குடியைக் கெடுக்கும்!
குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்!
(இது மதுபானம் பற்றிய கவிதை
அதனால்தான் இந்த எச்சரிக்கை...
இது 18+ பதிவாகவும் இருக்கலாம்)
சுவர்க்கத்தின் கதவுகள்
திறந்து இருக்கின்றன
மலர்களின் தேனை
அருந்தி மகிழுங்கள்...
பறந்து செல்லுங்கள்
சுவர்க்கத்தின் கதவுகள்
திறந்து இருக்கின்றன
பாடுங்கள் குயில்களே!
சோகத்தின் சுவடுகள்
அழிந்துப்போகட்டும்....
வசந்த வாழ்வின்
இன்ப மணிகள்
சிதறிக்கிடக்கின்றன
சிட்டுக்குருவிகளே!
சோம்பிக்கிடக்காமல்
பொறுக்கிச் செல்லுங்கள்...
சீக்கிரம் வாருங்கள்!
சிங்கக்குட்டிகளே...
இந்த நாட்டின்
எதிர்கால ஏந்தல்களே...!
நீங்கள் அருந்தும்போது...
உள்ளமும் உடலும்
ஜில்லென்று இருக்க..
குளிரூட்டப்பட்ட அறை!
இடை இடையே சுவைக்க
அத்தனை வகை
நொறுக்குத் தீணிகளும்
காரசாரமாக....
எழுச்சி கொண்டு வாருங்கள்
சுவர்க்கத்தின் கதவுகள்
திறந்திருக்கும் காலம்-
காலை பத்துமணியிலிருந்து
இரவு பத்துமணி வரை மட்டுமே!
(நீ ரொம்ப நல்லவனப்பா..
இப்படியே எழுது.....ஹி..ஹி...
உனக்கு விருது கிடைக்கும்...)
*********************************************
**********************************************
ஹாய்...பிரண்ட்ஸ்...இதுக்கு கருத்திட்டாலோ...ட்வீட்டேர்ல கீச்சினாலோ...பேஸ்புக்ல லைக் பன்னுனாலோ..யாரும் கைது செய்ய மாட்டாங்க...ஒன்னும் பயப்படாதிங்க...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |