ஏண்டா..அறிவுச்செல்வா!
இந்த வருஷம் நம்ம நாட்டுல என்னடா நடந்துச்சு?
இந்த வருஷ பேப்பர் படிச்சு சொல்லுடா...
-இந்தியக் குழந்தைகளில் 42 சதவீதம் பேர் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உடன் இருக்கிராங்கனு ஹங்காமா அறிவிக்கை சொல்லுது..அண்ணேன்.
அது யாருடா ஹங்காமா..? வெறும் அறிவிக்கை விட்டாப் போதுமா...?ஏதேனும் தீர்வு சொல்லவேண்டாமா...?
-HUNGaMA-னா (Hunger and M alnutrition) பசி-ஊட்டச்சத்து ஆய்வு அறிவிக்கை..ண்ணேன்
-காமன்வெல்த் ஊழல் சுரேஷ் கல்மாடி-க்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது.
அது என்னடா அவுங்களே பிடிக்கிறாங்க அவுங்களே விடுறாங்க..?
இதுக்கு பிடிக்காமலே இருந்திருக்கலாமே!
- தில்லியில் இஸ்ரேலிய தூதரகம் கார் குண்டுவெடிப்புக்கு உள்ளானது.
-கேரள கடற்கரையில் இத்தாலிய கப்பல் இரண்டு தமிழ் மீனவர்களை (தவறுதலாக?) சுட்டுக்கொன்றது.
-அஸ்ஸாம்,பிரமபுத்திரா நதியில் ஒரு படகு விபத்தில் 100 பேருக்கும் மேல் பலியானார்கள்.
- மாவோயிஸ்டுகள் பிணைக்கைதியாக 12 நாட்களுக்குப் பிறகு கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலையானார்.
அடே..அறிவில்லாதச் செல்வா...ஏதாவது நல்லதைச் சொல்லடா...
என்னடா..ஒரே கொலையும் கொள்ளையுமாச் சொல்லிட்டுருக்க.
இப்போகூடத் தில்லியில பாவம் ஒரு பெண்ணை ச்சே...சொல்லுரதுக்கே அசிங்கமா இருக்குடா...
- 50 லட்சம் மாணவர்கள் மத்திய பிரதேசத்தில் சூரிய நமஸ்கார நிகழ்ச்சி செய்திருக்கிறாங்க..அண்ணேன்.
ஏண்டா இப்படி...?..ஏன்? படிக்கிற பிள்ளைகளை வச்சி இப்படிப் பகுத்தறிவு இல்லாம செய்ராங்க...நம்ம மார்கண்டேய கட்ஜு சொல்லுறதும் சரிதான்.
- இந்தியாவின் வெற்றிகரமாகச் சோதனை 5000 கிமீ தூர அக்னி-V ஐசிபிஎம்
சரிடா..நீ படிச்சு கிழிச்சது போதும் ..
இந்த வருஷம் மாயன்களின் மாயங்கள் முடிஞ்சிப்போச்சாமடா ..அடுத்த வருஷமாவது நல்லா இருக்கணும்னு நாம நினைப்போமடா..
அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
thanks-YouTube-by Thecitizenofindia
அண்ணேன்...தமிழ்நாடு 2012 வாசிக்கட்டுமா..அண்ணேன்?
இருடா..எனக்கு வயத்த கலக்குது ....வாசிச்சது போதும் போடா.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |