நம்மை ஈர்க்கும்
நட்சத்திரங்களை
நெருங்கிப்போனால்..
இத்தனை நாளும்
நம்மை ஏய்த்தது
தெரிந்துப் போகும்
அணிந்து பார்த்தால்
அத்தனை வைரங்களும்
போலிக் கற்கள் என்று
புரிந்துப் போகும்.
ஒப்பனையில்லாத
பிரபலங்களை
அருகில் சென்று
உற்றுப் பார்த்தால்...
இவர்களா அவர்கள்..?
அத்தனையும்
பிரபலங்களின் மாயை!
நிஜத்தின் பிரதிபலிப்பல்ல!
புகழின் அடிமைகள்!
பெருமைக்காக
சிறுமை செய்பவர்கள் சிலர்.
தற்பெருமைக்காக
தன்னிலை இழப்பவர்கள் சிலர்.
நிலையற்ற புகழை
தவறவிட்டுத் தவிப்பவர் பலர்.
தடுமாறி விழுபவர் பலர்.
நிம்மதியின்றிப் பிதற்றுபவர் பலர்.
வாழ்ந்ததும் போதும்
வீழ்ந்ததும் போதும்
பிரபலமாகும்
மாயை வேண்டாம்.
பிரபலங்கள் மேல்
மாயையும் வேண்டாம்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |