நீ பார்க்கும்போது
உன் கலப்பைக் கண்கள்
என்னுள் விதைக்கின்றன
காதல் (க)விதைகளை!
அவைகள்
என்னுள் வளர்ந்தன
என் இதயத்தின்
இரத்தம் குடித்து....
அவைகள்
என்னுள் சிரிக்கின்றன
அழகு மலர்களாய்...
அன்பே!
அவைகளை நீ
அறுவடை செய்ய...
எங்கே நீயென்று
உன்னைப் பார்க்கும் போது..
உன் கால் விரல்களால்
நிலத்தை உழுகின்றாயே...
உன் கலப்பைக் கண்களால்
எதை விதைக்கிறாய்?
thanks-prafulla.net
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |