அன்றொருநாள்
கடவுளைத் தரிசிக்க...
காசிக்குப் போனார் அவர்
கண்டதோ அங்கே
பிச்சையெடுக்கும் பரதேசிகள்.
தாண்டவமாடும் அநீதிகள்
மிதந்து வரும் பிணங்கள்.
சத்திரங்களில்
தலைவிரித்தாடும்
சாதீய அக்கிரமங்கள்.
இல்லை உணவு அவருக்கு
இல்லையோ அவரும் மனித சாதி?
அடங்காப் பசியை
அடக்கின எச்சில் இலைகள்.
ஆனாலும்
அடங்கவில்லை அறிவுப்பசி
பற்றி எரிந்தது பகுத்தறிவுப் பசி.
இதுதான்
ஓர் ஆன்மீகவாதி
நாத்திகரானக் கதை!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |