அன்பே! அந்த வானத்தை நீ
அன்னாந்துப் பார்க்காதே!
என்னை நீ பார்க்கும் போது
என்னுள் பாய்கிறதே மின்சாரம்!
என்னவோ ஏதோ என்று
உன்னை நான் பார்க்கும் போது
நீ விண்ணைப் பார்க்கிறாய்..
அன்பே! அந்த வானத்தை நீ
அன்னாந்துப் பார்க்காதே!
எங்கேயோ திரிந்த
மேகங்கள் எல்லாம்
கூட்டம் கூட்டமாய்
உன்னைத் தேடி அலைகின்றன!
கலங்கித்தான் கண்ணீர் சிந்தின!
அன்பே! அந்த வானத்தை நீ
அன்னாந்துப் பார்க்காதே!
உன் பார்வை பட்டதால்
அந்த வெண்ணிலவும்
பாதியாகத்தான்
தேய்ந்துப் போனதே!
இருந்த கொஞ்சம் வெளிச்சமும்
இல்லாமல் போனதே!
thanks-deviantart
அன்பே!
அந்த வானத்தை நீ
அன்னாந்துப் பார்க்காதே!
அலங்கார விளக்குகளாய்
கண்சிமிட்டிய மின்மினிகள்
உன் கண் பட்டு, அய்யோ..
மின்வெட்டு ஆனதுபோல்..
காணாமல் போனதே!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |