பணம் பிணமும்
அடக்கம் இல்லையேல்
நாற்றமெடுக்கும்!
(யோவ்...பரிதி!
என்னய்யா குழப்புற..?)
அதற்குரிய நேரத்தில்
அடக்கம் செய்யாமல்
பிணம் இருந்தால்..
ஊரே நாறிவிடும்.
அது போலவே...
பணம் வைத்திருப்பவன்
அதற்குரிய இடத்தில்
அடக்கமாய் (மறைத்து)
வைக்கவில்லை எனில்...
பிணமாகி விடுவான்
(அதுதான் எல்லோரும்
சுவிஸ் வங்கியில வைக்கிறாங்களா?) பணம் வைத்திருப்பவன்
அதற்குரிய நேரத்தில்
அடக்கம் (பணிவு )இல்லாமல்
அடாவடி செய்வான் எனில்...
பிணமாகி விடுவான்
(அப்படிப் பார்த்தால்
இப்போது நாட்டில்
பணம் இல்லாதவர்தான்
பிணம் போல் இருக்கிறார்கள்)
உண்மைதான்
பணம் இருப்பவனும் பிணம்
பணம் இல்லாதவனும் பிணம்
.......................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |