google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சாட்சி இருக்கா...?

Sunday, December 23, 2012

சாட்சி இருக்கா...?





 
பாலியல் வன்கொடுமையே!
உன்னால் இங்கே
பாதிக்கப்பட்டவர்களில்...
இறந்தவர்களே அதிகம்..
இருந்தவர்களும்
இருப்பவர்களும்
இந்த இழி நினைவில்  
இறந்துபோன நிலையே...

சட்டம்  
பல கோணங்களில்
உன்னைப் பார்க்க...
சாட்சி இருக்கா..?
ஆதாரத்தைத் கேட்கிறது.
ஆதாரத்திற்கேற்ற
தண்டனை தருமாம்.
அடம் பிடிக்கிறது.
அதுதான் தர்மமாம்.

கொள்ளைப் போனது
வங்கிப் பணமா...?
வாழ்க்கை இல்லையா...?
வங்கிக் கொள்ளையும்
பாலியல் வன்கொடுமையும்
ஒன்றாகுமா இவ்வுலகில்?

பாலியல் வன்கொடுமையே!
இவ்வுலகில் உனக்கு
பல நாடுகளில் பலநேரங்களில்
சிறைத் தண்டனையே!
சில நாடுகளில் சிலநேரங்களில்
மரண தண்டனை..!
இன்னும் சில நாடுகளில்
இறந்து போனவர்கள்
மீண்டும் பிறந்து வந்து...
ஆதாரம் தந்தால்தான்
அதுவும் தண்டனையா?

சாட்சி இருக்கா...?
சாட்சி இருக்கா...?


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1