சொர்க்க வாசல்
திறப்பு விழா!
திறப்பு விழாவுக்கு
போன நண்பனை
காணவில்லை!
அப்புறந்தான்
செய்திவந்தது
அங்கே
அடி பிடி..
நெரிசலில் சிக்கி
அவர் இருந்தார்
நரக வேதனையுடன்
மருத்துவமனையில்...
நல்லவேளை
அவர் இருந்தார்...
போகவில்லை
சொர்க்கமோ...?
நரகமோ....?
அப்படித்தான்
அன்று நிறைய நண்பர்கள்
நசுங்கிப் போனார்கள்...
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
ஒரு முறை குளிப்பவர்கள்..?
கும்பக்கோணம் குளத்தில்
குளிக்கப்போனவர்கள்.
அய்யகோ!
குளிக்கப்போனவர்களில்
கொஞ்சம் பேர்
கூட்டத்தில் நசுங்கி
குழிக்குள் போனார்கள்....
....................................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |